search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள் மீட்பு"

    • புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச் செயல்பட்டு வருகிறது.
    • பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று பகுதியில் புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச் செயல்பட்டு வருகிறது.

    இந்த பாரடைஸ் பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர சுண்ணாம்பாற்று பகுதியில் இருந்து படகு சவாரி இயக்கப்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கம்.

    அதற்காக சுண்ணாம்பாற்று கடற்கரை பகுதியில் மரத்திலான படகு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் படகு குழாமுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பாரடைஸ் பீச்சுக்கு படகு சவாரி செய்தனர்.

    பின்னர் மாலையில் படகு குழாமுக்கு திரும்ப காத்திருந்தனர். அப்போது ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படகில் செல்வதற்காக மரப் பலகையிலான படகு பாலத்தில் முண்டியடித்து ஏறியதால் பாரம் தாங்காமல் திடீரென பாலம் சரிந்து உள்வாங்கியது.

    இதில் தூத்துக்குடி விடுதலை நகரை சேர்ந்த ஜூலி, மேரி, கீதா உள்பட 10-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆற்றில் விழுந்தனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    தண்ணீரில் தத்தளித்தப்படி அலறல் சத்தம் போட்ட அவர்களை உடனடியாக படகு குழாம் ஊழியர்கள் மீட்டனர். அதிர்ஷ்ட வசமாக ஏதும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் ஆற்றில் விழுந்த சுற்றுலா பயணிகளின் செல்போன்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. அந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×